08/02/2025
🌺நோய் தீர்க்கும் கோவில்கள்
🔥சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் பொற் பாதங்கள் சரணம்🔥
🍁 அருள்மிகு வைத்தீஸ்வரன் கோயில்,
மயிலாடுதுறை, தமிழ் நாடு🍁
மூலஸ்தான தெய்வம் ஸ்ரீ வைத்தியநாதன்
தொழுநோயிலிருந்து அங்காரகனை சிவபெருமான் குணப்படுத்திய தலம். தையல்நாயகி தேவியின் திருவுருவச் சிலையின் கைகளில் மருந்து எண்ணெய் கலந்த கிண்ணம் உள்ளது. மேலும், சிவபெருமான் நிறைவேறிய தலம், முருகப் பெருமானின் வேண்டுதலால் காயம் அடைந்தவர்கள் குணமடைகின்றனர். பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற தன்வந்திரி சித்தரின் சமாதியும் இக்கோயிலில் உள்ளது.
நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி.
மூர்த்தி : பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு பத்ரகாளி, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
🍁தலச்சிறப்பு :
சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, உமை தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும், சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம்.
இன்றும் நோய் தீர்க்கும் தலமாக அமைந்து உள்ளதால் பக்தர்கள் கார்த்திகை தோறும் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு உள்ள செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன, நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட தீர்வாகும்.