28/04/2024
சாய்ந்தருது பிரதேச ஸ்மார்ட் யூத் பாரம்பரிய கலாச்சார விழா
கபூர் அன்வர்
இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம், சாய்ந்தருது பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய ஸ்மார்ட் யூத் 2024 புதுவருட பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா 27-04-2024 இன்று சனிக்கிழமை சாய்ந்தருது பௌசி கடற்கரை விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்.எம். சியாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை திருநாட்டின் அதிமேதகு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஸ்மார்ட் யூத் 2024 பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு நாடாளவிய ரீதியில் இன்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இடம்பெற்றது விசேட அம்சாமாகும்.
அதனைத் தொடர்ந்து ஆரம்பமான ஜனரஞ்சக விளையாட்டு விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான சாக்கோட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பிண்ணுதல்,
தேங்காய் துருவுதல், பலூன் ஊதி உடைத்தல், சங்கீத கதிரை, கயிறு இழுத்தல், மெதுவான துவிச்சக்கர சைக்கிளோட்ட போட்டி என பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க சேவை அதிபர் வி. ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி திணைகள பணிப்பாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் மன்றத்தின் உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,இளைஞர் கழக பிரதிநிதிகள் ,
விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.