03/01/2026
சாமி V லேண்ட்மார்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட “நிறங்கள் 2026” ஓவியப் போட்டி இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை அறந்தாங்கி வட்டாட்சியர் திரு. கருப்பையா அவர்கள் துவக்கி வைத்து, மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் நேர்த்தியான மற்றும் அழகான ஓவியங்களை வரைந்தனர். போட்டியின் இறுதியில் ஓவியங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் திருமதி புவனேஸ்வரி மலர்விழி, திரு. முத்துராமன் (BOI) – வங்கி மேலாளர், டாக்டர் ஸ்ரீனிவாசன், திரு. மதியழகன் – தலைமையாசிரியர் (ஓய்வு), மற்றும் சாமி V அறக்கட்டளை அறங்காவலர் திருமதி செல்லசிலம்பேஸ்வரி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முன்னதாக, ஓவியப் போட்டி ஒருங்கிணைப்பாளர் S. பூபதி (ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றி மாணவர்களை வரவேற்றார்.
நன்றியுரையை சாமி V லேண்ட்மார்க்ஸ் நிறுவனர் டாக்டர் P. வெங்கடாசலபதி அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாமி V லேண்ட்மார்க்ஸ் மேலாளர் S. கணேஷ் மற்றும் ஊழியர்கள் மிகச் சிறப்பாக மேற்கொண்டனர்.