KodaiHub

KodaiHub Kodaihub welcomes you to experience Kodaikanal with a broad range of services like Tree House, Bamboo

17/12/2025

விதைச் சட்ட மசோதா- 2025 ஐ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சட்டமுறையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை விதைகளின் மீது நிலைநாட்டவும் விதைகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு/குறு உழவர்களின் உரிமைகளைச் சிதைக்க முனைகிறது, விதைத் துறையை வாழ்வாதாரத்தின் மையத்தில் இருந்து சந்தையின் மையத்திற்கு உந்தித் தள்ளும் வகையில் உள்ளது.

உண்மையில் விதை ஒரு நாட்டினுடைய உணவின் உயிர்மூச்சாக உள்ளது. விதை என்பது வெறும் வேளாண் இடுபொருள் பண்டம் அல்ல, உயிரியல் நினைவகம், பண்புக் கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, வேளாண்மைத் தொழில்நுட்பம் அனைத்திற்கும் மேலாக நமது அடையாளம். தற்போது நடைமுறையில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச்சட்டத்தை மாற்றியமைக்கின்ற வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 1966 விதைச் சட்டம் எந்தக் காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எவ்வித விளக்கங்களும் வரைவு மசோதாவில் அளிக்கப்படவில்லை. மேலும் 1966 விதைச் சட்டம் வர்த்தக ரீதியாக உள்ள விதைகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் மட்டுமே செயல்படுகிறது.

சமூகச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை 1966 விதைச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அவை விவசாயிகளின் உரிமையாக இருப்பதை 1966 சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் புதிய விதைச் சட்ட மசோதா, அனைத்து வகையான விதைகளையும் புதிய சட்டத்தின் கீழாகப் பதிவு செய்ய வலியுறுத்துகிறது.
இந்திய விதை இறையாண்மையின் மீதான இத்தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தாளாண்மை உழவர் இயக்கத்துடன் பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கு ஒன்றை 17.12.2025 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகைத் தருமாறு அழைக்கிறோம்.

பதிவுசெய்ய:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOidztJ4QaZf6GgSErcEtSiONQTevGY4gv-eLKpDMYCXDdXA/viewform ...

தொடர்புக்கு:
ஆதர்ஷ்: 90949 90900

17/12/2025

விதைச் சட்ட மசோதா- 2025 ஐ ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சட்டமுறையில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை விதைகளின் மீது நிலைநாட்டவும் விதைகளின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு/குறு உழவர்களின் உரிமைகளைச் சிதைக்க முனைகிறது, விதைத் துறையை வாழ்வாதாரத்தின் மையத்தில் இருந்து சந்தையின் மையத்திற்கு உந்தித் தள்ளும் வகையில் உள்ளது.

உண்மையில் விதை ஒரு நாட்டினுடைய உணவின் உயிர்மூச்சாக உள்ளது. விதை என்பது வெறும் வேளாண் இடுபொருள் பண்டம் அல்ல, உயிரியல் நினைவகம், பண்புக் கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, வேளாண்மைத் தொழில்நுட்பம் அனைத்திற்கும் மேலாக நமது அடையாளம். தற்போது நடைமுறையில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச்சட்டத்தை மாற்றியமைக்கின்ற வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 1966 விதைச் சட்டம் எந்தக் காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எவ்வித விளக்கங்களும் வரைவு மசோதாவில் அளிக்கப்படவில்லை. மேலும் 1966 விதைச் சட்டம் வர்த்தக ரீதியாக உள்ள விதைகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் மட்டுமே செயல்படுகிறது.

சமூகச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை 1966 விதைச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அவை விவசாயிகளின் உரிமையாக இருப்பதை 1966 சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் புதிய விதைச் சட்ட மசோதா, அனைத்து வகையான விதைகளையும் புதிய சட்டத்தின் கீழாகப் பதிவு செய்ய வலியுறுத்துகிறது.
இந்திய விதை இறையாண்மையின் மீதான இத்தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தாளாண்மை உழவர் இயக்கத்துடன் பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கு ஒன்றை 17.12.2025 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகைத் தருமாறு அழைக்கிறோம்.
தொடர்புக்கு

ஆதர்ஷ்: 90949 90900

16/12/2025
28/11/2025

குப்பைக்குவியலில் இருந்து ஒரு பெண்ணை எடுக்கவில்லை… நான் ஒரு வைரத்தை எடுத்தேன்.”
— அசாமின் சோபரன் கூறிய இந்த ஒரு வசனமே, மனிதநேயத்தின் உண்மையான முகத்தை உலகுக்கு நினைவூட்டுகிறது.

அசாமைச் சேர்ந்த சோபரன், 30 வயதுடைய இளைஞர்…
தினமும் காய்கறி விற்று வாழ்வு நடத்தி வந்தவர். திருமணமே ஆகாதான்.

ஒரு மாலை, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோர புதர்களில் குழந்தை அழும் சத்தம்…
சென்று பார்த்தார் —
குப்பைக்குவியலில் பல நாட்களாக கைவிடப்பட்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தை.
அழகும், நிர்ப்பாவமும் நிறைந்த அந்தச் சிறுமியை பார்த்த நொடியே சோபரனின் மனம் உருகிவிட்டது.

யாரும் இல்லை… எங்கும் ஆதாரம் இல்லை.
ஆனால் அவர் எடுத்த முடிவு வாழ்க்கையை மாற்றியது.

அந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து,
அவளை “ஜ்யோதி” என்று பெயர் வைத்து,
“மகள்” என்று பார்த்து வளர்க்கத் தொடங்கினார்.

✔ காலையிலும் இரவிலும் கடுமையாக உழைத்தார்
✔ தானே பசித்தாலும் ஜ்யோதி பசிக்க விடவில்லை
✔ நல்ல பள்ளியில் படிக்க வைத்தார்
✔ அவளுக்கான ஒவ்வொரு ஆசையும் நிறைவேற்ற முயன்றார்

2013-ல் ஜ்யோதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார்.
2014-ல் Public Service Commission தேர்வில் தேர்ச்சி பெற்று
➡ Income Tax Department-ல் Assistant Commissioner ஆனார்!

அந்த நாள் சோபரன் கண்கலங்கினார் —
“நான் செய்ய முடியாததை என் மகள் சாதிச்சிட்டா…” என்று பெருமையுடன் கூறினார்.

இன்றும் ஜ்யோதி தன் தந்தையை முழு மனதுடன் பார்த்துக்கொள்கிறாள்.
ஆனால் அவர் இன்னும் எளிய காய்கறி வியாபாரத்தையே தொடர்கிறார்.
“இது தான் எனக்கு பிடிச்ச வாழ்க்கை…” என்று சிரித்தபடி சொல்கிறார்.

இந்த உலகில்
👉 தந்தை என்றால் ரத்தம் பொருந்தியவர் மட்டுமல்ல,
👉 அன்பால் உருவாக்கப்பட்ட உறவுகளும் அதைவிட பெரியவை என்பதை

சோபரன் மற்றும் ஜ்யோதி நிரூபித்திருக்கிறார்கள். ❤️

20/11/2025
20/11/2025
20/11/2025

ரோடு வசதி இல்லாத பல ஊருக்கு நேரிலேயேப்போய் வீட்டிலேயே பிரசவம் பார்த்த இந்த டாக்டர பாராட்டாம இருக்கவே முடியாது! சொல்லப்போன்னா, இந்த மாதிரி நிறைய டாக்டர் மக்களுக்கான சேவையை செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க, ஆனா அவங்கள வெளியிலதான் தெரிய மாட்டேங்குது! அதும் இவங்க ஒருபடி மேலன்னு சொல்லணும்! ஏன்னா, பிரசவத்துக்கு மலை கிராமம், குக்கிராமத்துக்கெல்லாம் ஊருக்கேப்போய் பிரசவம் பார்த்திருக்காங்க, இன்னுமும் பாக்கறாங்க! அதைவிட முக்கியமா, ஒரு ரூபா கூட காசு வாங்கமாட்டாங்களாம், எல்லாரும் சொல்ற விஷயம் இவங்க ரொம்ப கைராசிக்காரங்க, அதுவும் இவங்க கைய்யவச்சா சுகப்பிரசவம் மட்டும்தான்னும் சொல்றாங்க! கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு பாருங்க! இப்படி ஒரு டாக்டர், அதும் நம்ம ஊர்ல இருக்காங்கன்னு நினைச்சு அதுவும் நாம வாழ்ந்துகிட்டு இருக்க இந்த காலகட்டத்துல நம்ம கூட பயணிக்கிறத நெனச்சு கண்டிப்பா நாம சந்தோஷப்படணும், இவங்களுக்கு நன்றியும் சொல்லணும்... அதைவிட முக்கியமா இந்த மாதிரி சேவை செஞ்சு பல விருதுகள வாங்கிருக்காங்க! ஆனா இதுவரைக்கும் வெளிய தெரியல, வெளியே யாரும் தெரியப்படுத்தவும் ஆசைப்படலன்னுதான் தோணுது! நானே ஒரு சின்ன பெட்டி செய்தியிலதான் இவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டேன், உங்களுக்கும் சொல்லணும்னு தோணுச்சு, அவ்ளோதான்!

20/11/2025

காமெடியின் மூலம் மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று..
-
-
-
-

19/11/2025

ஆலங்குடி 515 கணேசன்! முதியவரின் 47 ஆண்டுகால சமூகசேவை பணி. 108 ஆம்புலன்ஸ் ஐடியா வந்தேதே இவரால் தான்.

Address

Kodaikanal
624101

Alerts

Be the first to know and let us send you an email when KodaiHub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share