11/03/2021
#பாபநாசம்_போக்கும்_பாவம்!
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது பாபநாசம் திருத்தலம். இங்கே, தன்னை நாடி வரும் அனைவரின் பாவங்களையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீபாபநாசநாதர். அம்பாளின் திருநாமம் உலகம்மை நாயகி. ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்!
கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.
அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இந்தத் தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான் என்கிறது ஸ்தல புராணம். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர் என்கின்றனர்.
அகத்தியரின் சீடரான ரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி ரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் 9 இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் ரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் போற்றப்படுகிறது .
இச்சிறப்பு பெற்ற தளத்தில் உங்கள் பாவங்களை போக்க அணைத்து பரிகாரங்களும் எங்களது தாமிரபரணி லாட்ஜ் மூலம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது. வெளியூர் பக்தர்கள் தங்களது குடும்பத்தோடு வந்து எங்களது லாட்ஜில் தங்கி அணைத்து பரிகாரங்களையும் சிறப்பாக முடித்து செல்ல அணைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்து தருகிறோம் .
என்றும்
இறைபணியில்
தாமிரபரணி லாட்ஜ்
94866 15037, 96776 62535,
http://www.thamirabaranilodge.in/