04/08/2024
*இந்த பேரழிவு இறைவனுடைய தண்டனை *என்று சில மக்கள் கூறிக்* *கொண்டிருக்கிறார்கள்* அப்படி கூறத்* *தேவையில்லை*
*நஹஸ் மாலா*
*அகில இந்திய முன்னாள் தலைவர்*
*Sio*
ஒவ்வொரு நபிமார்களின் காலகட்டத்தில் ஒவ்வொரு விதமான பேரழிவு ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த சமூகங்களின் அழிவு அந்தந்த நபிமார்களின் முன்னிலையில் இறைவன் ஏற்படுத்தினான். அதை வைத்து, இந்த பேரழிவை அல்லாஹ்வின் தண்டனை என்று நாம் முடிவு செய்வது தவறு.
இந்த பேரழிவு வயநாடு மக்களுக்கான சோதனையாக இருக்கலாம் அல்லது அதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கான சோதனையா? என்று சொல்ல முடிய வில்லை.
திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களை திடீரென தாக்காது என்று இவ்வுலகில் வாழும் மக்கள் அச்சமற்று இருக்கிறார்களா?
அல்லது பகலில் அவர்கள் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே நம்முடைய வேதனை அவர்களை தாக்காது என்று இவர்கள் நிம்மதியுடன் இருக்கின்றார்களா? என்ன, இம் மக்கள் அல்லாஹ்வின் சூழ்ச்சி குறித்து அச்சமற்றி ருக்கின்றார்களா? உண்மையில் அழிந்து போகக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சி" குறித்து அச்சமற்றிருப்பார்கள்.(அல்அஃராஃப் 97,98,99)
நாமெல்லாம் *நான் சாகிப்கள்*
நான் நான் என்ற கர்வத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நான் பெரியவன், நான் பெரிய உத்யோகத்தில் இருக்கிறேன், பெரிய பதவியில் இருக்கிறேன்.
நான் ஒரு பெரிய வியாபாரி. நீங்கள் எதுவானாலும் இருக்கலாம், இறைவனுடைய அருளால் என்று மறவாதீர்கள்.
நான் நான் என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவன் என்ன கூறுகிறான்? மனிதன் பலவீனமானவன் என்று.
நம்மை பொருத்தளவு வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது அவ்வுளவு தான்.
எதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு கிராமத்தில் நடந்திருக்கிறது என்று நினைக்கலாம். இது போல எங்கும் நடக்கலாம் என்று நாம் கடந்து செல்லுகிறோம்.
நமக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
ஜாமியாவில் படித்த ஒரு மாணவர் ஷியாப் ஃபைசி. அவர் வையநாடில் ஒரு பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றினார். சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அவர்தான் ஜும்மா குத்பா நடத்தினார். அவர் இரவில் எப்போதும் பள்ளிவாசலிலேயே தங்கிவிடுவார்.
இந்த பேரழிவில்
அவருடைய உடல் வையநாட்டிலிருந்து 80km தொலைவில் கண்டறியப்பட்டது. பிறகு வயநாட்டிலிருந்து அவருடைய உறவுகள் நண்பர்கள் ஒரு சிலர் வந்து இங்கிருந்து உடலை வயநாட்டிற்கு எடுத்து சென்றார்கள்.
திருக்குர்ஆனில் லுக்மான் அத்தியாயத்தில் இறைவன் கூறுகிறான்."நீங்கள் எங்கு மரணிப்பீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது" என்று.
இங்கு நிலம்பூரில் பல நண்பர்கள் மற்றும் இங்கு வசிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு Volunteers Group அமைத்து 21 Batch ஆக பிரித்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
அப்போது Volunteers மனித உடல்களின் பாகங்களை எடுத்துக் கொண்டு வருவது பார்க்கும் போது இது இறைவனின் மாபெரும் சோதனையாக உணர்கிறேன்.
தலை இல்லாத உடல், உடல் இல்லாத தலை, கை கால், பாதம் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் எத்தனை உடல்களின் பாகங்களை எடுக்க காத்திருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் எத்தனை மனித உடல்களின் பாகங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது என்று தெரியவில்லை.
இன்னும் மீட்பு பணிகள் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருக்கிறது.
NGO உடன் சேர்ந்து புணர் நிர்மாணம் செய்ய தயாராக இருக்கின்றோம்.
நாம் எதை செய்தாலும் மரணித்தவர்களுக்கு ஈடுசெய்ய நம்மால் சாத்தியம் இல்லை.
தமிழில்
ஜொஹரா சுல்தான்