25/01/2021
மன முதிர்ச்சி என்றால் என்ன?
1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக் கொள்வது.
2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.
11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
வாழ்க்கையில் எது முக்கியம், எது அவசியம், எது சாரம்,எது நிம்மதி, எது நாள் பட்டும் நல்லது செய்யக்கூடியது, எது விருப்பத்துக்குரியதானாலும் ஒதுக்கத்தக்கது,எது கவர்ச்சியற்று இருந்தாலும் நன்மை பயக்கக்கூடியது, எதை/ யாரை நம்பலாம்,எதை யாரை நம்பக்கூடாது, எதெல்லாம் மறக்க/மன்னிக்கப்படலாம், எதையெல்லாம் தாண்டி வருவது அவசியம் — இப்படி அறிந்துகொண்டு கடைப்பிடிப்பது தான் #அறிவு_முதிர்ச்சி.
எது சரி எது கெடுதல் என்று பகுத்தறிவது விவேகம்.
எது தீமை என்று புரிந்துவிட்டதோ அதன் மீதுள்ள பற்றை விலக்குவது வைராக்கியம்.
விவேக-வைராக்கியம் வருவது மனமுதிர்ச்சியின் அறிகுறி.
காமம், குரோதம், உலோபம், மதம்,மாச்சரியம் இவை குறைவது மன முதிர்ச்சியின் அறிகுறி.
வயது ஏற ஏற சுயநலம் குறைவது, பிறர் நலம் பேணுவது, விட்டுக்கொடுப்பது, அகங்காரத்தைக் குறைப்பது, வாழ்க்கையில் எளிமையைக் கைக்கொள்வது, விநயம் வருவது, கடன் வாங்கி ஆடம்பரம் செய்யாது இருப்பது, வருமானத்துக்குள் செலவழிப்பது, பிறரோடு கூடுதல் ஒத்துப்போவது, கூடுதல் பொறுமை வருவது. வீண்வம்பு பேசாதிருப்பது, சிண்டுமுடிந்துவிடாது இருப்பது இவையெல்லாம் வருமானால் அவை மன முதிர்ச்சியின் அடையாளங்கள் .
நன்றி.